ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு மிரட்டல் - பள்ளி தாளாளர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், தனியார் பள்ளி தாளாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

சென்னை பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொன்னைபாலு உட்பட 22 பேர் கைதான நிலையில், பல பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், கடலூரை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரை அழைத்து வந்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தின்போது, கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 நாட்டு வெடிகுண்டுகள், கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் செயலிழக்கப்பட்டன. 

Night
Day