ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கைதானவர்கள் ஆஜர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜாவின் சகோதரர் உட்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் சீசிங் ராஜாவின் சகோதரர் உட்பட 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கொலையாளிகளுக்கு, ரவுடி சீசிங் ராஜா நிதியுதவி வழங்கியதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Night
Day