ஆம்ஸ்ட்ராங் படுகொலை - புதிய சிசிடிவி காட்சி வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான முக்கிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காாட்சி வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ரவுடி திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் தனித்தனியே போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், முக்கிய குற்றவாளியான ரவுடி திருவேங்கடம் இன்று அதிகாலை சென்னை மாதவரத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவு திருவேங்கடம், முதலில் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டுவது பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து, உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் உடையில் வந்த கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி சாய்க்கும் பரபரப்பு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

கைதானவர்களே உண்மைக் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போலீசார் இந்த சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். கொலை செய்தவர்களின் அடையாளங்களை குறிப்பிட்டு போலீசார் இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

varient
Night
Day