இன்ஸ்டாவில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இன்ஸ்டாவில் திருவொற்றியூர் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த  சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். சென்னை காசிமேட்டை சேர்ந்த ரவுடிகள் தேசப்பன், ரிஷி கண்ணன் ஆகியோர் ரியல் எஸ்டேட் ஊழியர் ஆகாஷ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேசப்பன் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ரவுடி ரிஷிகண்ணாவை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே, இன்ஸ்டாகிராமில் திருவொற்றியூர் போலீசாரை ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த ரிஷி கண்ணாவின் வீடியோ வெளியாகி வைரலான நிலையில் வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற அவரை எழும்பூர் ரயில் நிலையத்தியத்தில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். இதனை அடுத்து விசாரணையின் போது கழிவறையில் வழுக்கி விழுந்து காயமடைந்த ரவுடி ரிஷிகண்ணாவை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Night
Day