இருவேறு ரயில்களில் கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை ரயில் நிலையத்தில் இருவேறு ரயில்களில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.  


கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரள விரைவு ரயிலில் சோதனை செய்தனர். அதில், கேரளாவை சேர்ந்த அபு தாஹிர் என்பவரிடன் சுமார் ஒன்றரைக் கிலோ உலர்ந்த கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதே போல்,  திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் ஒடிசாவை சேர்ந்த நபரிடம் இருந்து மூன்றரைக் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Night
Day