இரு வேறு மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு வேறு மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 


சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் கூட்டுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மாவட்ட ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல் கான்கர் மாவட்டத்தில், சோட்டேபெத்தியாவின் கோரோஸ்கோடோ கிராமத்திற்கு அருகே நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படையினரின் எண்கவுன்டரில் நான்கு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 

Night
Day