இலங்கைக்கு கடத்த முயன்ற 12 பெட்டி வலி நிவராணி மாத்திரைகள் பறிமுதல் - ஒருவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 12 பெட்டி வலி நிவாரணி மாத்திரைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர். 

மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பெரியபட்டினம் தெற்கு புது குடியிருப்பு கடற்கரை பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கை செல்ல தயாராக இருந்த படகை சோதனை செய்தபோது 12 பெட்டிகளில் வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், பெரிய பட்டினத்தை சேர்ந்த முகமது மீராசா என்பவரை கைது செய்தனர். 

Night
Day