ஈரோடு: போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 இளைஞர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் பவானி அருகே போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அம்மாபேட்டை காவல்நிலையம் எதிரே பவானி மேட்டூர் தேசிய நெடுஞ்சாலை சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 10 மாத்திரைகள் கொண்ட 9 அட்டைகள் அடங்கிய போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையத்து போதை மாத்திரைகள் , இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், 4 இளைஞர்களை கைது செய்தனர்.

Night
Day