ஈரோடு: போதை மாத்திரை விற்பனை - 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். சித்தோடு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக எழுந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போதை மாத்திரை விற்ற கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், பரத்குமார் இருவரையும் கைது செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க செய்ய மாவட்ட எஸ்பி, ஆட்சியருக்கு பரிந்தரைத்தார். இதையடுத்து தினேஷ்குமார், பரத்குமார் இருவரும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

varient
Night
Day