ஈரோடு: முறைகேடாக மது விற்ற நபர் கைது - 100க்கும் அதிகமான மதுபாட்டில்கள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் பவானி அருகே வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு மதுபான கடைகள் மூடப்பட்ட பிறகு, ஒருவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் முறைகேடாக மதுபாட்டில்கள் விற்ற சந்தானம் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

Night
Day