உ.பி. சிறையில் பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் சிறைக் கைதியான பிரபல தாதாவும் அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். மாவ் தொகுதியில் இருந்து  ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மீது 15 கொலை வழக்குகள் உள்பட 61 குற்ற வழக்குகள் உள்ளது. ஆயுள் தண்டனைக் கைதியான அவருக்கு சிறையில் விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  இதையடுத்து மாநிலம் முழுவதும் 144  தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பண்டா, மாவ், காஜிபூர் மற்றும் வாரணாசி மாவட்டங்களில் துணை நிலை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day