எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல் - தலைமை நீதிபதி விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தை விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அயனாவரத்தில் நடந்த விபத்து தொடர்பான வழக்கை எடுத்து நடத்துவதில் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார் என்பவருக்கும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தீர்ப்பதற்காக, எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இருதரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையீடு செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.  

Night
Day