ஒடிசாவுக்கு கடத்த முயன்ற கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து ஒடிசாவுக்கு கடத்த முயன்ற கஞ்சா சாக்லெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆர்.ஆர் மாவட்டத்தில் இருந்து ஒடிசாவுக்கு கஞ்சா சாக்லெட்டுகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு போலீசார் கோகாபேட்டையில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரின் வீட்டை சோதனை செய்தனர். அப்போது, 40 கஞ்சா சாக்லெட் பொட்டலங்களை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கஞ்சா கலந்த சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

varient
Night
Day