ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஓசூர் ரயில் நிலையம் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்த பூபதி என்ற பெண், தனது மகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். மூவரும் கடலூரில் உள்ள வள்ளலார் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது 60 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து பூபதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day