ஓசூர் அருகே அண்ணனை கொன்ற நபரை திட்டம் தீட்டி கொன்ற தம்பி உட்பட 7 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அண்ணனை கொன்ற நபரை திட்டம் தீட்டி கொன்ற தம்பி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனேகல்லை சேர்ந்த நண்பர்களான மனோஜ் என்ற பல்பி மற்றும் யஸ்வந்த் ஆகியோர் ஏழு வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை சந்தித்துள்ளனர். அதன்பின் ஏற்பட்ட பிரச்சனையில் மனோஜ் யஸ்வந்தை கொடூரமாக தாக்கியுள்ளார். இதையடுத்து யஸ்வந்த் தனது நண்பர் விஜயகுமாருடன் சேர்ந்து மனோஜை கொலை செய்தார். இருவரும் சிறை சென்ற நிலையில் பெயிலில் வெளிவந்த விஜயகுமாரை, மனோஜின் தம்பி அர்ஜூன் வெட்டிக் கொலை செய்தார். அர்ஜூன் தனது கும்பலுடன் கொலை செய்வதற்காக இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் காத்திருந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Night
Day