கடலூர்: தனியார் பள்ளி வேன் மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது ஆண்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜனின் மூத்த மகன் ரவிக்குமார் காடாம்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறான். இந்த நிலையில் ரவிக்குமாரை அழைத்து செல்ல சென்ற பள்ளிவேன் மோதியதில், வீட்டினருகே நின்று கொண்டிருந்த சிறுவனின் ஒன்றரை வயது தம்பி ரக்சன் உயிரிழந்தான். தகவல் அறிந்து சென்ற காடாம்புலியூர் போலீசார் ரக்சனின் உடலைக் கைப்பற்றி, வேன் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

varient
Night
Day