கடலூர்: முன்விரோதம் காரணமாக உடற்கல்வி ஆசிரியர் கழுத்தறுத்து கொடூர கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே முன் விரோதம் காரணமாக தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரை கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த அருண்பாண்டியனை, அதேபகுதியை சேர்ந்த சதீஷ்குமார் கழுத்தை சரமாரியாக தாக்கி கழுத்தை அறுத்து கொலைசெய்தார். இதனையடுத்து 3 தனிப்படை அமைத்து கொலையாளியை தேடிவந்த போலீசார், சதீஷ்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும் போலீசாரிடமிருந்து தப்பமுயன்றபோது, சதீஷ்குமாருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. சதீஷை கைதுசெய்த போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், முன்விரோதம் காரணமாகவே அருண்பாண்டியனை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக சதீஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Night
Day