கடலூர்: மெடிக்கல் கடையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு - 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் கழுதூரில் சட்டவிரோதமாக கருக்கலைபில் ஈடுபட்ட  மெடிக்கல் கடை உரியமையாளர் உட்பட 4 நான்குபேரை போலீசார்  கைது செய்தனர். கழுதூர் கிராமத்தில் உள்ள ஓம் சக்தி மெடிக்கல் என்ற மருந்து கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது,  அங்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறுவதும் தெரியவந்தது. இதனையடுத்து,  மெடிக்கல் உரிமையாளர் மணிவண்ணன், மருந்தாளுநர் கௌதமி மற்றும் தரகர்கள் கண்ணதாசன், தினேஷ்‌ ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Night
Day