கனடா: 6 பேர் கத்தியால் குத்திப் படுகொலை - 19 வயது இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனடாவின் ஒட்டாவா நகரில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டாவா புறநகர்ப் பகுதியான பார்ஹேவனில் இலங்கையை சேர்ந்த 35 வயதுடைய தர்ஷினி தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்றிரவு இவரது வீட்டுக்குள் புகுந்த நபர், வீட்டில் இருந்த அனைவரையும் கத்தியால் குத்தினார். இதில் கணவர் படுகாயம் அடைந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு இலங்கையை சேர்ந்த டி சொய்சா என்ற 19 வயது இளைஞரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day