கன்னட நடிகர் தர்ஷன் மீது 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னட நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது 4 ஆயிரத்து 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது காதலியான நடிகை பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில், தர்ஷன் சிறைக்குள் சொகுசு வாழ்க்கை அனுபவித்த புகைப்படம் வைரலானதை அடுத்து, தர்ஷன் உட்பட 10 பேர் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டு, வரும் 8ம் தேதியுடன் 3 மாதங்கள் நிறைவடைய உள்ளதால், தர்ஷன் உட்பட 17 பேர் மீது 4 ஆயிரத்து 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை பெங்களூர் போலீசார் தாக்கல் செய்தனர்.

varient
Night
Day