க்ரைம்
சென்னை எண்ணூரில் 111 டைக்கின் ஏசி திருட்டு
ஆந்திராவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னரில் வந்த ஏசி பெட்ட?...
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காதலி வீட்டின்முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுக்கடை பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவர் ஆற்றுப்புறம் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவருடைய மகளை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷின் தந்தை பெண் கேட்டு சென்றபோது தேவராஜ் அவமதித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளைஞர் காதலி வீட்டின் முன் சென்று பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் முகேஷை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னரில் வந்த ஏசி பெட்ட?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...