கன்னியாகுமரி: தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்த கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து காந்திதாம் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. பார்வதிபுரம் பகுதியில் சென்றபோது ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் இருப்பதை கண்டு சுதாரித்துக் கொண்ட லோகோ பைலட் ரயிலின் வேகத்தை குறைந்துள்ளார். இருப்பினும் ரயில் பலத்த சத்தத்துடன் பாறை மீது மோதியது. ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

varient
Night
Day