கன்னியாகுமரி: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒழுகினசேரி பகுதியில் 67 வயதான மூதாட்டி குமாரி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக சென்னை சென்று இருப்பதை அறிந்து கொண்ட கொள்ளையர்கள், குமாரியின் வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அண்டை வீட்டார் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கோட்டாறு போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

varient
Night
Day