கரூர்: 10 வயது சிறுவன் அரிவாளால் வெட்டி கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் புகலூர் அருகே பொங்கல் விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்குச் சென்ற சிறுவனை, சித்தப்பாவே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணேசபுரம் அன்பரசன்-சங்ககிரி தம்பதியின் இளைய மகன் பாரதி செம்படாபாளையத்தில் உள்ள தனது தந்தைவழி பாட்டி வீட்டிற்கு பொங்கல் விடுமுறைக்காக சென்றுள்ளான் . இந்த நிலையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அவனது சித்தப்பா மோகன்ராஜ் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சிறுவன் துடிதுடித்து உயிரிழந்தான். தகவல் அறிந்து சென்ற வேலாயுதம்பாளையம் போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி, இதுகுறித்து வழக்குப் பதிந்து மோகன்ராஜிடம் விசாரித்து வருகின்றனர். 

Night
Day