கர்நாடகா: மாமனாரை வாக்கிங் ஸ்டிக்கால் அடித்த மருமகள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவின் மங்களூருவில் பெண் ஒருவர் தனது 87 வயது மாமனாரை அவரது வாக்கிங் ஸ்டிக்கால் பலமுறை தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மின்சார வாரிய அதிகாரியான உமாசங்கரி என்பவர் மாமனார் பத்மநாப சுவர்ணாவுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். பின்னர் வாக்கிங் ஸ்டிக்கை பிடுங்கி அடிக்கும் போது வலி தாங்காமல் கையெடுத்து கூப்பி அடிக்க வேண்டாம் என பத்மநாபா கதறுகிறார். இருப்பினும் மனம் இறங்காத உமா சங்கரி மீண்டும் தாக்கி அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். இந்த காட்சிகள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் உமா சங்கரி கைது செய்யப்பட்டுள்ளார்.  

varient
Night
Day