கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் எரித்துக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திவந்த பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சீர்காழியை சேர்ந்த சுகுணா திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இன்ஸ்டாகிராம் செயலி மூலம் தன்னைவிட 6 வயது குறைவான வல்லரசு என்ற இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாற, தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளையும் விட்டுவிட்டு சேலத்தில் உள்ள கருமத்தான்காடு பகுதியில் வல்லரசுடன் முறையற்ற உறவில் வாழ ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் வல்லரசு வீட்டின் முன்பு சுகுணாவின் உடல் முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்தது குறித்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வல்லரசுவை கைது செய்த போலீசார், சுகுணா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day