கள்ளக்குறிச்சி: கோயில் கலசத்தை திருடி விற்க முயற்சி - 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நூற்றாண்டு பழமையான கோயிலில் கலசத்தை திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருநறுங்குன்றம் கிராமத்தில் உள்ள அருள்மிகு வல்லப விநாயகர் கோயில் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட 3 பேர் கொண்ட கும்பல் கோயில் கலசத்தை திருடி அதில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியத்தை விற்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கோயிலில் திருட முயன்றவர்களை அவ்வூர் பொதுமக்கள் சுற்றிவளைத்தபோது ஒருவர் தப்பியோடிய நிலையில் 2 பேரை போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து பிடிபட்ட கென்னடி, செந்தில்குமார் ஆகிய இருவரையும் உளுந்தூர்பேட்டை சிறையில் அடைத்தனர்.

Night
Day