கள்ளக்குறிச்சி: தொழிலதிபர் வீட்டினுள் புகுந்து மர்மநபர்கள் அட்டகாசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பொருட்களை அடித்து நொறுக்கி மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியானது.
மூலசமுத்திரம் தக்கா பகுதியை சேர்ந்த பூட்டோ என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அசமத்துல்லா குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அசமத்துல்லாவின் ஆட்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன், பூட்டோ வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும், கொலை வெறியுடன் பூட்டோவை தேடி சுற்றிய நிலையில், மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day