கள்ளக்குறிச்சி: பூட்டிய வீட்டில் 86 சவரன் நகை மற்றும் 23 லட்சம் பணம் கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு பேருந்து நடத்துனர் வீட்டில் 86 சவரன் தங்க நகை மற்றும் 23 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. அரசுப்பேருந்து நடத்துனராக பணியாற்றும் எஸ்.வி.பாளையத்தை சேர்ந்த அருள்ஜோதி, தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருள்ஜோதி மற்றும் அவரது மனைவி, பீரோக்களை திறந்து பார்த்ததில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 86 சவரன் நகை மற்றும் 23 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். 

Night
Day