கள்ளக்குறிச்சி: மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர் குடும்பத்தினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பைத்தந்துறை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமர், தனது வீட்டின் எதிரே உள்ள புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தி வந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த திமுக கவுன்சிலர் சீதா பாமாவின் கணவர் அருணாச்சலம், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் திமுக கவுன்சிலர் குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி ராமரின் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம், ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் வெளியானதை அடுத்து கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் உட்பட 14 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Night
Day