கள்ளக்குறிச்சி: வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கி விட்டு தலைமறைவான ஊராட்சி செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தொட்டியம் ஊராட்சி செயலாளர் துரை, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து ஜெகனை தாக்கியுள்ளார். இதனால் நெஞ்சு வலி ஏற்பட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் ஜெகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஜெகன் அளித்த புகாரின்படி சின்னசேலம் போலீசார் தலைமறைவான ஊராட்சி செயலாளரைத் தேடி வருகின்றனர்.

Night
Day