கள்ளச்சாராய மரணங்கள் - ரூ.10 லட்சம் எப்படி வழங்க முடியும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையை சேர்ந்த முகமது கோஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல் என்றும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருத கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஷசாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம் எனவும், இவ்வளவு பெரிய தொகையை எப்படி வழங்க முடியும்? என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

Night
Day