கழிவறையில் விஷவாயு கசிவு - 3 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் கழிவறையில் விஷவாயு தாக்கி தாய், மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள புது நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி செந்தாமரை என்பவர், கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, கழிவறையில் விஷ வாயு தாக்கியதால் செந்தாமரை மயங்கி கிழே விழுந்துள்ளார். இதனை கண்ட அவரது மகள் காமாட்சி தாயை தூக்க சென்றபோது, இருவரும் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பாட்டியையும், தாயையும் காப்பாற்ற சென்ற பேத்தி பாக்கியலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி செல்வராணியும் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தியதில், வீட்டிற்கு அருகில் அமைத்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையத்திலிருந்து விஷ வாயு கழிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதனால், வீடுகளில் உள்ள கழிவறைகள் வழியாக விஷவாயு கசிந்தால் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கழிவு நீர் வாடிக்காலை சரி செயயும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், விஷவாயு பரவிய கழிவறை அமைந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day