காஞ்சிபுரம் - தனியார் கல்லூரி மாணவி தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியின் 5வது மாடியிலிருந்து கீழே குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார்.

ஏனாத்தூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஷர்லி என்ற மாணவி படித்து வந்தார்.

மன அழுத்தம்

இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று கல்லூரியின் 5வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். அப்போது உடனடியாக சக மாணவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்பாக 5-ஆம் மாடியில் ஷர்லி அமர்ந்திருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day