காஞ்சிபுரம் : 5 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லூர் அருகே வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவனை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின், 5 வயது மகன் நிர்மல்ராஜ் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள வயல்வெளியில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த தெரு நாய் ஒன்று நிர்மல்ராஜை வாய் பகுதியில் கடித்து குதறியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் உடனடியாக நிர்மல்ராஜை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day