காஞ்சிபுரம்: மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி தாளாளர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த தாளாளரை போலீசார் கைது செய்தனர். உத்தரமேரூர் வட்டம் மானாம்பதி ஊராட்சியில்  தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தாளாளராக உள்ள சகாயராஜ் என்பவர் பள்ளியில் பயிலும்,  இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு சில தினங்களாக தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ள நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இதுகுறித்து  விசாரணை மேற்கொண்ட போலீசார் பள்ளி தாளாளர் சகாயராஜ் மீது "போக்சோ" சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day