காவல்நிலையத்தில் தனது செல்பொனை ஒப்படைத்த டிடிஎஃப் வாசன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் யூடியூப் பிரபலம் டிடிஎப் வாசன் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். 

கடந்த மாதம் 15ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் சென்ற டிடிஎஃப் வாசன், செல்போன் பேசியபடி காரை ஓட்டியதாக மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது மன்னிப்பு கோரிய டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக மதுரை அண்ணாநகர் காவல்துறை நோட்டீஸ் கொடுத்தனர். அதன் அடிப்படையில் கடந்த 3ம் தேதி காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரான வாசன் தனது செல்போனை ஒப்படைக்க காவல்துறையிடம் 2 நாட்கள் அவகாசம் கோரி இருந்தார். இந்த நிலையில் இன்று தனது செல்போனை மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் டிடிஎப் வாசன் ஒப்படைத்தார்.

Night
Day