காஷ்மீர் : பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 10 பக்தர்கள் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற சிவகோடி குகைக் கோயிலுக்குச் செல்வதற்காக 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது ரியாசி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பகுதியில் இருந்து பூனியன் கந்தா என்ற ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதி மக்களின் உதவியுடன் விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பேருந்தில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காயமடைந்த 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அப்பகுதியில் காவல்துறை, ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படையினர்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day