கிருஷ்ணகிரி : நகைக்கடை உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள நகைக்கடை உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில், பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் விளக்கினார். 
போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நகைக்கடைகளின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நகைக்கடையில் சிசிடிவி கேமரா பொருத்துவது, அலாரம் பொருத்துவது, இரவு காவலரை நியமிப்பது, கட்டிடங்களை பாதுகாப்பானதாக மாற்றுவது, நகைக்கடையை சுற்றி நான்கு புறங்களிலும் மின் விளக்குகள் பொருத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Night
Day