கிருஷ்ணகிரி: கடன் நெருக்கடியால் தம்பதி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை - 3 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய கந்துவட்டிக்காரர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். டிரெண்ட் சிட்டி பகுதியில் வசித்து வந்த பாலசண்முகம் என்பவர், ஜெயலட்சுமி ஸ்டீல்ஸ் என்ற கடையை நடத்தி வந்த நிலையில் நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் என்பவரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கிய நிலையில், அவர்கள் பணத்தை செலுத்தக்கூறி நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலசண்முகம், சுகந்தி தம்பதி எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பாலகிருஷ்ணன், வெங்கடாசலபதி, சத்தியநாராயணா ஆகியோரை கைது செய்தனர்.

varient
Night
Day