கிளாம்பாக்கத்தில் ரூ.70 கோடி போதைப்பொருள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையிலிருந்து இலங்கைக்கு 70 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைனை கடத்தவிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளாம்பாக்கத்திலிருந்து, ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அதிகாரிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற பைசூல் ரஹ்மத் என்பவரை பிடித்து விசாரித்து, அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 6.92 கிலோ மெத்தம்பெட்டமைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், செங்குன்றத்தை சேர்ந்த மன்சூர் மற்றும் இப்ராஹிம் ஆகிய 2 நபர்களிடம் இருந்து மெத்தபெட்டமைனை வாங்கி வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.  

Night
Day