குஜராத்: ரூ.300 கோடி மதிப்பிலான கடத்தல் ஹெராயின் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் கடற்கரையில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் கடற்பகுதியில் சந்தேகப்படும் வகையில் படகு ஒன்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, நிகழ்விடத்துக்கு சென்ற போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவினர், அந்தக் படகை பிடித்து, அதில் கடத்தப்பட்ட 50 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய காவல்துறை, அவர்களிடம் இருந்து, சேட்டிலைட் போன் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். 

Night
Day