குன்றத்தூர் நகராட்சி ஆணையரின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 33 லட்சம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட குன்றத்தூர் நகராட்சி ஆணையரின் வங்கி லாக்கரில் இருந்து 33 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். குன்றத்தூர் நகராட்சி ஆணையரான குமாரி 24 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கடந்த 11 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசரால் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மற்றும் 3 வங்கியின் லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றதின் அனுமதியுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார், சேலையூரில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் 8 லட்சம் ரூபாயும், ஆக்சிஸ் வங்கியில் 20 லட்சம் ரூபாயும், பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 5 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

Night
Day