கும்பகோணம்: ரோலிங் ஷட்டர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய விசிகவினர் மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கும்பகோணம் அருகே ரோலிங் ஷட்டர் நிறுவனத்தில் பணம்கேட்டு மிரட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கும்பகோணம் - சென்னை புறவழிச் சாலையில் பாலகிருஷ்ணன் என்பவர் ரோலிங் ஷெட்டர் நிறுவனம் வைத்துள்ளார். கடந்த 26ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் கோவில் திருவிழாவிற்கு 50 ஆயிரம் ரூபாய் கேட்டு நிறுவனத்தில் இருந்த மோகன் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மோகன், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசிகவைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் பூமிநாதன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day