கூடுவாஞ்சேரியில் காவலர் குடியிருப்பில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள காவலர் குடியிருப்பில் நாட்டு வெடிகுண்டு வெடித்தாக செய்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜிஎஸ்டி சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் பெட்ரோல் குண்டு வெடித்தாகவும் இதில் ஒரு காவலர் காயமடைந்ததாகவும் தகவல் பரவியது. ஆனால் போலீஸ் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றும் சரவணன் என்பவர் பணிமுடித்துவிட்டு, ஓய்வு எடுப்பதற்காக  காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து சுத்தம் செய்தபோது, 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததாகவும் இதில் காயமடைந்த போக்குவரத்து காவலர் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day