கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கணவரை மீட்டு தர, பெண் கண்ணீர் மல்க புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் கோழிப்பண்ணையில் கூலித்தொழிலாளியை கட்டி வைத்து கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியான நிலையில் தனது கணவரை மீட்டு தரக்கோரி பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். ஜெகதாபி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிமேகலை. இவரது கணவர் மாரிமுத்து நாமக்கல்லில் சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், வேலையை விட்டு நின்ற அவரை சிலர் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ மனைவியின் செல்போனுக்கு வந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் இருதரப்பினரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் தனது கணவரை காணவில்லை என மணிமேகலை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்நிலையில் கோழிபண்ணை உரிமையாளர்  தரப்பில் இருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day