கோயிலில் கணக்காளர் மீது ஆசிட் வீச்சு- இருவர் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கோயில் ஊழியர் மீது ஆசிட் வீசிய இருவர் கைது செய்யப்பட்டனர். 


சாய்தாபாத் பகுதியில் உள்ள பூலட்சுமி மாதா கோவிலுக்குள் ஹோலி பண்டிகை நாளன்று நுழைந்த அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் கணக்காளர் நர்சிங் ராவ் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பி சென்றார். படுகாயமடைந்த நர்சிங் ராவ்வை மீட்ட பக்தர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே கோவிலில் ஊழியராக வேலை செய்யும் ராஜசேகர் சர்மா, ஹரிநாத சர்மா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.

Night
Day