கோவை : பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் போக்குவரத்து காவலரை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2ம் தேதி கோவை மாவட்டம் சங்கனூர் சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்துள்ளார். அப்போது பெண் ஓட்டுநர் ஷர்மிளா போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை கேட்டபோது, போக்குவரத்து காவலரை வீடியோ எடுத்த ஷர்மிளா, அவரை கடுமையாக விமர்சித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து போக்குவரத்து காவலர் அளித்த புகாரின் பேரில், மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

varient
Night
Day