கோவை: மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் மீது போலீசார் வழக்கு பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையை சேர்ந்த மைவி 3 ஏட்ஸ் ஆன்லைன் எம்.எல்.எம் நிறுவனத்தார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதை கண்டித்து நிறுவனத்திற்கு ஆதரவாக அதன் உறுப்பினர்கள் நேற்று நீலாம்பூ புறவழிச்சாலையில் குவிந்தனர். இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி தந்த புகாரின் அடிப்படையில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், பொது இடத்தில் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Night
Day