சரக்கு ரயில் மீது ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை தண்டையார்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் கவின் சித்தார்த். இவர் தனது நண்பர்களோடு தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அருகில் இருக்கக்கூடிய ரயில்வே யார்டுக்கு புகைப்படம் எடுக்க சென்ற அவர், சரக்கு ரயில் மீது ஏறியபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கவின் சித்தார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day